Sri Lalitha Maha Thiripurasundari Ambal Devasthanam Kilampakkam

            Sri Lalitha Maha Thiripurasundari Ambal Devasthanam 

          அழைப்பு விடுத்த அம்பாள்

                                     


                               

                                                        யார் அந்த அம்பாள்?

சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி சிவகங்கை குளத்தருகே சிரித்திருக்கும் ஸ்ரீ மீனாக்ஷியவள்.

மூககவியின்  வாய்முகமாக முத்தான பஞ்சசதியை முழங்க வைத்த கருணைக் கடலாம் காமாக்ஷியவள்  

அபிராம பட்டரின் அருட்கூற்றை மெய்ப்பிக்க ஆகாயத்தில் தனது தாடங்கத்தை வீசி முழு நிலவைக் காட்டிய அன்னை அபிராமியவள்.

அந்த அம்பாள் எங்கள் வாழ்வில் நிகழ்த்திய அற்புதத்தைப் பற்றிய பதிவு இது.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் இரவில் .அம்பாள் என் கணவரின் கனவில் தோன்றி தன்னைக்காணவருமாறு அழைப்பு விடுத்ததுதான் இந்த பதிவுக்கான காரணம்தொலைகாட்சி மெகா தொடர்களைப் போலஅலுக்காமல் மூன்று முறை கனவில் தோன்றி விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து “என்னைக் காண வர மாட்டாயா என்று கேட்கவே அதிர்ந்து போன என் கணவர் “வா வா என்கிறாயே,  எங்கு வர வேண்டும் என்று சொல்ல வில்லையே என்றாராம்எல்லாம் தூக்கத்தில்தான்நான் காக்களூர் தொழிற்பேட்டைக்கு அருகில்தான் இருக்கிறேன் தேடிக்கொண்டு வா என்று அழைப்பு விடுத்துவிட்டு மறைந்து விட்டாளாம்ஆனால் ஒரு கையில் கரும்புத் தோகைமற்றொரு கையில் பஞ்சபுஷ்பத்தோடு அமர்ந்த திருக்கோலத்தில் காட்சியளித்த அம்பாளை அவர் மனத்தில் பதித்துக் கொள்ள மறக்கவில்லை.

அடுத்த நாள் காலை எழுந்ததுமே எப்போதுமே கை கொடுக்க ஆயத்தமாக இருக்கும்  கூகிள் ஆண்டவர் துணையோடு  காக்களூர் தொழிற்பேட்டைக்கு அருகில் உள்ள தேவி ஆலயங்களைத் தேட ஆரம்பித்தோம்.கிளாம்பாக்கம் என்ற கிராமத்தில் லலிதா திரிபுரசுந்தரி ஆலயம் ஒன்று இருப்பதை கூகிள் வரைபடம் காட்டியதுஅடுத்த நாள் காலை புறப்பட்டுவிட்டோம் அம்பாளைத் தேடிக் கண்டுபிடிக்க.

வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் இறங்கி அங்குள்ள ஆட்டோ ஓட்டுனரைக் கேட்டோம்கிளாம்பாக்கம் போய் கோயிலைப் பற்றி விசாரிக்கலாம் என்று எங்களை அழைத்துச் சென்றார்ஊருக்குள் நுழைந்தபிறகு நாங்கள் விசாரித்த ஒருவருக்கும் கோயிலைப் பற்றித் தெரியவில்லைஒரு பெண்மணி மட்டும் ஊருக்கு வெளியில் அகஸ்தீஸ்வரர் கோயிலுக்குப் பின்னால் ஒரு நாகாத்தம்மன் கோயில் உள்ளதுஅங்கு போய் விசாரித்துப் பாருங்கள் என்றார்அந்த சிவன் கோயிலைத் தேடிக்கொண்டு போனோம்மதியம் 12 மணி இருக்கும்சிவன் கோயில் மூடிக் கிடந்ததுஆனால் பக்கத்தில் திறந்திருந்த நவக்ரஹ சன்னதியில் ஒரு பெண் வலம் வந்து கொண்டிருந்தாள் . அந்த பெண்ணின் அருகில் போய் லலிதாம்பாள் கோயில் எங்கிருக்கிறது தெரியமா என்று கேட்டோம்அதற்கு அந்த பெண் எனக்கு சரியாகத் தெரியவில்லைஎன் அப்பாவுக்குத் தான் தெரியும் , நான் வீட்டிற்குப் போய் அவரிடம் கேட்டு விட்டு உங்களிடம் வந்து சொல்கிறேன்ஆனால் பின்னால் உள்ள கோயில் அருகே ஒருவர் நின்று கொண்டிருக்கிறாரே அவரையும் கேட்டுப் பாருங்கள் என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள்.சிவன் கோயிலுக்குப் பின்புறம் ஒரு வறண்ட குளமும் அதன் கரையில் ஒரு சிறிய ஆலயமும் காணப்பட்டதுஒருவர் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து கொண்டு செல்போனைப் பார்த்துக் கொண்டிருந்தார்அவரிடம் கேட்டபோது இந்த சின்ன கோயில்  அம்மன் கோயில்தான் ஆனால் என்ன பெயர் என்றெல்லாம் எனக்குத் தெரியாதுஇந்தவீதியிலேயே ஒரு மஞ்சள் கலர் வீடு இருக்கும் . அவர்கள்தான் இந்த கோயிலைப் பார்த்துக் கொள்பவர்கள் என்றார்அதே ஆட்டோவிலேயே மஞ்சள் நிற வீட்டைத் தேடிக்கொண்டு சென்றோம்.

               கதவைத் திறந்த பெண்மணியைப் பார்த்தவுடனேயே அம்பாள் அனுக்ரஹம் பெற்றவர் போன்று தோன்றியது. நாகம்மாள் என்ற அந்த பெண்மணி அம்மன் கோயிலைப் பற்றி கேட்க ஆரம்பித்தவுடனேயே லலிதாம்மா கோயிலைப் பார்க்க வந்திருக்கிறீங்களாவாங்க கோயிலைத் திறந்து காட்டறேன் என்று எங்களுடன் வந்தார்ஓரடி நீளம் கொண்ட பெரிய சாவியைப் போட்டு கதவைத் திறந்த உடனேயே  தீபஒளியில் தெரிந்தது தேவியின் முகம்அதைப் பார்த்தவுடனேயே என் கணவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர் கசியத் தொடங்கியதுகனவில் வந்த அதே அம்பாள்.ஒரு கையில் கரும்புத் தோகை,அடுத்த  கையில் பஞ்சபுஷ்பம்,ஒரு கால் மடித்து ஒருகால் தொங்கவிட்டு அமர்ந்த திருக்கோலம்.தன்னை அழைத்து வந்து விட்டாள் என்ற ஆனந்தம்கண்டுபிடித்துவிட்டோம் என்ற மகிழ்ச்சிஎல்லோரையும் விட்டு என்னை ஏன் அழைத்தாள் என்ற திகைப்பு –இப்படி அனேக உணர்ச்சிகள் அவர் முகத்தில் பிரதிபலித்தன                                              


                             அதற்குள் நவக்ரஹ சன்னதியில் நாங்கள் பார்த்த பெண் ஓடி வந்து “ அம்மாஇது லலிதாம்பாள் கோயில் தானாம்அப்பா சொன்னார் என்று கூறினாள்நம் வேலை முடிந்தால் சரி அடுத்தவர் எப்படி போனால் நமக்கென்ன என்று பலரும் நினைக்கும் இந்த காலத்தில் அந்த சிறு பெண் கொதிக்கும் வெயிலில் கோயிலைப் பற்றி சொல்ல வந்தது அந்த கிராம மக்களின் தன்னலமற்ற பண்பை எடுத்துக் காட்டியதுசாக்ஷாத் அந்த அம்பாளே அந்த பெண் வடிவில் வந்தது போல் தோன்றியதுஅடுத்த ஒரு மணி நேரம் கோயிலை கவனித்துக் கொள்ளும் பெண்மணியுடன் பேசிக் கொண்டிருந்தபோது தெரிய வந்த விஷயங்கள்அந்த கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்னால் சிறுவர்கள் சிலர் விளையாடும்போது மண்ணைப் பிசைந்து கடவுள் சிலைகளை வடித்து கோயில் விளையாட்டு விளையாடுவார்களாம்அவர்களில் கார்த்திக் என்ற சிறுவன் சிமெண்ட் மணல் கலவை கொண்டு கழுத்தளவு அம்பாள் சிலை வடித்து அதற்கு நாகாத்தம்மன் எனப்பெயரிட்டு கொட்டகை ஒன்றை கோயிலாக அமைத்து வழிபாடுகள் செய்வானாம்நல்ல வேளை அந்த காலத்தில் செல்போன் இல்லை இருந்தால் அவர்களும் PubG  விளையாடப் போயிருப்பார்கள்நாகாத்தம்மன் சிலையின் படம் இதோ கீழே உள்ளது.

                         காலம் கடந்ததுகார்த்திக் வளர்ந்து வாலிபனாகி படித்து வேலைக்குப் போகத் தொடங்கினாலும் அம்பாள் பக்தி மட்டும் குன்றாமல் குறையாமல் கூடிக் கொண்டே வந்ததுகொட்டகையில் இருந்த நாகாத்தம்மனுக்கு கோயில் கட்ட வேண்டும் என்ற ஆசையும் வளர்ந்து கொண்டே வந்ததுஊதியத்திலும் விவசாயத்திலும் கிடைத்த பணத்தில் ஓரளவு ஒதுக்கி வைத்து ஊர்மக்கள் உதவியுடன் ஒரு வழியாக ஒரு சிறிய கோயில் அமைத்து நாகாத்தம்மனை அங்கு அமர்த்தி பூஜை செய்யப்பட்டு வந்தது.

                      இதனிடையே லலிதா திரிபுர சுந்தரிக்கு கிளாம்பாக்கம் போக வேண்டும் என்ற ஆசை வந்தது போலும்அம்பாளின் லீலையை யாரால் புரிந்து கொள்ள முடியும்! காட்சியளித்தாள் கார்த்திக்கின் கனவில்;    ஆணையிட்டாள் அவர்களது கிராமத்திற்கு அழைத்துச் செல்லும்படிகார்த்திக்கிற்கு ஒன்றும் புரியவில்லைசிவன் கோயில் அர்ச்சகரின் அறிவுரையின் படி காஞ்சிபுரம் சங்கரமடம் சென்று நடந்ததை விவரிக்கவே அவர்களுடைய ஆலோசனை பேரில் மஹாபலிபுரம் சென்று ஸ்தபதியைச் சந்தித்து தன் கனவில் கண்டவாறு அம்பாள் சிலையை வடித்துத் தரும்படி கோரிக்கை வைக்கப்பட்டது .திருமீயச்சூர் லலிதாம்பிகை போன்று காலில் கொலுசு மாட்ட துளை உள்ள வகையில் வடிவமைக்கப்பட்ட அம்பாள் சிலையும் வந்ததுபிரதிஷ்டை செய்யும்போது வைக்கவேண்டிய செப்புத் தகடும் சங்கர மடத்திலிருந்து கிடைத்ததுபின் என்ன அம்பாள் ஆனந்தமாக கிளாம்பாக்கத்தில்குடியேறினாள். முன்பிருந்த நாகாத்தம்மன் அருகில் அமைக்கப்பட்ட தகரக் கொட்டைகைக்கு மாற்றப்பட்டாள்.

                                               


                               அம்பாள் குடியேறிய கோயிலுக்கு க்ரில் கதவு மட்டுமே போடப்பட்டிருந்ததுஅதை உடைத்து உள்ளே புகுந்த  ஒரு கள்வன் கும்பாபிஷேகத்தின்போது அணிவிக்கப்பட்ட ஒரு பவுன் திருமாங்கல்யத்தை திருடிச் சென்று விட்டதாகவும்  அதன் பிறகு மரக்கதவு அமைத்து முழ நீள சாவி வைத்து அதைப் பூட்டி கோயிலை பத்திரப்படுத்தியுள்ளதாகவும் நாகம்மாள்  தெரிவித்தபோது எங்கள் இருவர் மனதிலும் ஒரே நேரத்தில் தோன்றிய எண்ணம் ,அம்பாளுக்கு ஒரு திருமாங்கல்யம் செய்து சாற்ற வேண்டுமென்பதுதான்அதற்குள் அங்கு வந்து சேர்ந்த கார்த்திக்குடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அடுத்த வாரம் மீண்டும் வருவதாக கூறிவிட்டுத் திரும்பினோம் .பின் ஒரு திருமங்கல்யம், 9 கஜ புடவை,ரவிக்கைதுணிமாலை புஷ்பம்வாழைதார் ஆகியவற்றோடு அடுத்த வாரம் சென்றோம்இந்த முறை ஞாயிற்றுக்கிழமை என்பதால் கார்த்திக்கின் ஏற்பாட்டில் அபிஷேகத்துக்கு வேண்டிய பொருட்கள் தவிர அபிஷேகம் செய்ய அர்ச்சகர் ஒருவரும் வந்திருந்தார்அபிஷேகம் நடக்க நடக்க அர்ச்சகருடன்  சேர்ந்து லலிதா சஹஸ்ரநாமம் படித்ததில் இருந்து கார்த்திக் அம்பாளுடன் ஒன்றிப் போயிருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது. 10 ஆயிரம் ரூபாயை கோயில் செலவுக்கு வைத்துக் கொள்ளும்படி கொடுத்தபோது அபிஷேகத்திற்கு சிவன் கோயில் வரை போய் தண்ணீர் கொண்டுவர வேண்டியிருப்பதால் இந்த பணத்தை வைத்து இங்கேயே ஒரு ஆழ்துளை கிணறு தோண்டலாமா என்று கேட்கவேசரி என்று சொல்லிவிட்டு புறப்பட்டோம்.

      அடுத்து அம்பாள் நிகழ்த்திய அற்புதம் ஆழ்துளை கிணறு அமைக்க வந்தவர் கனவில் தோன்றியதுஇரண்டு நாட்களாக துளையிட்டும் நீர் வந்த பாடில்லை என்பதால் அவர்  அடுத்த நாள் காலை வேறொரு இடத்தில் தோண்டிப் பார்க்கலாம் என்று முடிவு செய்துவிட்டு உறங்கப் போனார்தனது பக்தர்களுக்கு பொருள் நஷ்டம் ஏற்பட விடுவாளா அந்த கருணாமயிஅவரது கனவில் தோன்றி அடுத்த நாள் அதே இடத்தில் மேலும் 10 அடி தோண்டப் பணித்தாள்அம்பாள் ஆணையை ஏற்று அவர் அதே இடத்தில் தோண்ட எண்ணி பத்தாவது அடியில் தண்ணீர்  வந்தது.

தண்ணீருக்கு வழி பிறந்து விட்டதுஅடுத்து கார்த்திக் கூறியதற்கு இணங்க கருவறை சுவர்களுக்கு கருங்கல் பதிக்கும் பணிக்கு ஏற்பாடு செய்யலாம் என்று நாங்கள் நினைத்தோம்இல்லைஇல்லை நாங்கள் நினைக்கவில்லை ,அவள் எங்களை நினைக்க வைத்தாள்அதே நேரம்  இந்த கோயிலுக்கு முன்புறம் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான அகத்தீஸ்வரர் ஆலயத்துக்கு மதிற்சுவர் கட்டும் பணிக்கு உதவ முன்வந்தது காஞ்சி சங்கர மடம்அதை மேற்பார்வையிட வந்த மடத்து பிரதிநிதிகள் லலிதா திரிபுரசுந்தரியை வணங்க வந்தனர்.                                                  


            அப்போது அவர்கள் கார்த்திக்கிடம் கருமாரியம்மனுக்குத் தான் நாகர் பின்னால் குடை பிடித்திருக்கும்.லலிதாம்பிகை என்றால் கரும்பு வில்,பிறை சந்திரன் ஆகியவை இருக்கலாம்ஆனால் நாகர் இருப்பது உசிதமல்ல என்று அறிவுறுத்தினார்களாம்                          

           பெரியவர்கள் வாக்கு பரமேஸ்வரன் வாக்கு என்பார்கள் அல்லவாஅதனால் கார்த்திக் நாகரை அகற்றி விடலாம் என்று முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து முடித்த நேரம்கருங்கல் பதிக்கும் பணியும் முடிவடைந்ததுகும்பாபிஷேகம் நடத்தலாம் என்று ஊர் பெரியவர்கள் முடிவு செய்தனர்சித்ரா பௌர்ணமியன்று நாள் குறிக்கப்பட்டது.கிளாம்பாக்கம் மக்கள் எத்தனை பக்தியுடனும் சிரத்தையுடனும் கோயில் விழாவில் கலந்து கொண்டு கைங்கர்யம் செய்ய முன்வருகிறார்கள் என்பதை அன்றுதான் எங்களால் காண முடிந்ததுஅந்த ஊரைச் சேர்ந்த ஒரு முதிய பெண்மணி கண்களில் நீர் மல்க என்னிடம் கூறினார்” கஷ்டம் ஏதாச்சும் வந்து அம்மா கிட்டே முறையிட்டா அம்மா கண்ணைத் திறந்து எங்க கிட்டே பேசுவாங்கவழி காட்டுவாங்கஎன்றார்உண்மைதான்,குழந்தைகள் அல்லல் படும்போது அன்னைதானே ஆதரவு கரம்  நீட்டுகிறாள்.                   

         இந்த ஆலயத்தில் திருமீயச்சூர்  போல சித்ரா பௌர்ணமி மிக விமர்சையாகக் கொண்டாடப்படுகிறதுவிழா காலங்களில் எளிய கிராம வாசிகள் பணமாக இல்லையென்றாலும்  அரிசி, பருப்பு ,தேங்காய் எண்ணெய் போன்று தங்கள் நிலத்திலிருந்து கிடைக்கும் பொருட்களை அம்மனுக்கு காணிக்கையாக அளிக்கின்றனர் ஒரு மகளிர் குழு பெரிய பெரிய பித்தளை தாம்பாளங்கள்விளக்குகள் இவற்றை புளி போட்டு பளபளவென்று தேய்த்து தயார் செய்கிறார்கள்மற்றொரு குழுவினர் அம்பாளுடைய வஸ்திரங்களை தூய்மையாக்குகிறார்கள்இன்னொரு குழுவினர் மலர்களைத் தொடுத்து மாலை கட்டுகிறார்கள்  சில ஆண்கள் பழங்களை வெட்டி பஞ்சாமிர்தம் செய்கிறார்கள்ஊர் மக்கள் அனைவருக்கும் உணவு தயாரிக்கும் பணிகளை சிலர் மேற்பார்வை இடுகிறார்கள்இந்த கூட்டு முயற்சி எத்தனை ஆர்வத்துடனும் அன்புடனும் மேற்கொள்ளப்படுகிறது என்பது நேரில் பார்த்தவர்களுக்குத் தான் புரியும்மாலை 6 மணியளவில் அம்பாளுக்கு முன்பாக சர்க்கரை பொங்கலில் பாத்தி கட்டி நடுவில் குடம் குடமாக நெய்  ஊற்றப்படுகிறதுசர குத்து விளக்கொளியில் அம்பாளின் அருள் தவழும் முகம் அந்த நெய்யில் பிரதிபலிப்பது கண்கொள்ளா காட்சிஇரவு உற்சவ மூர்த்தி மலர் அலங்காரத்துடன் ஊர்வலம் வருகிறது. 


                        இந்த ஆலயத்தில் மற்றொரு முக்கிய விழா ஆடிப்பூரம்அம்பாளுக்கு வளையல்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றனபின்னர் வந்திருக்கும் பெண்கள் அனைவருக்கும் வெற்றிலை பாக்கு மஞ்சள் குங்குமம் ரவிக்கை துணி வளையல் அனைத்தும் தாய்வீட்டு சீதனம் போல் அளிக்கப்படுகின்


                         இவை தவிர ஆடி வெள்ளி தை வெள்ளிவருடப் பிறப்புநவராத்ரி ஆகிய பண்டிகைகளும் விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றனபணவளம் குறைந்திருந்தாலும் மனவளம் நிரம்பி வழியும் கிளாம்பாக்க மக்கள் தங்களால் இயன்றவரை தங்கள் கிராமத்துக்கு வந்துள்ள அம்பாளைப் போற்றி வழிபடுகின்றனர்.

            இப்போது கோயில் நிர்வாகத்தின் சார்பாக பக்தர்களின் பொருளுதவியுடன் மஹா சாம்ராஜ்ய சாலினியான லலிதாம்பிகைக்கு ஓர் அழகான ஆலயம் அமைக்கப்பட்டு வருகிறதுஆர்வமுள்ள மற்றும் ஆன்மீக நாட்டமுள்ள அனைவரும் இந்த திருப்பணிக்கு நிதியளிக்க முன்வரலாம்தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண் 9551207784

         இந்த பதிவைப் பார்த்த பின்னர் இந்த கோயிலை நேரில் சென்று காணவேண்டும் என்று விரும்புவோர் பின்வரும் கூகிள் வரைபட இணைப்பைப்  பயன்  படுத்திக்  கொள்ளலாம்.       https://www.google.co.in/maps/place/SRI+LALITHA+MAHA+THIRIPURA+SUNDARI+AMBAL+TEMPLE/@13.1567652,79.4111196,9z/data=!4m5!3m4!1s0x3a528f7c71e782dd:0x274f6b809ab75217!8m2!3d13.1567652!4d79.9714224

                  செவ்வாய்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிளாம்பாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு லலிதா திரிபுரசுந்தரி ஆலயத்திற்குச் சென்று அம்பாளின் அருளைப் பெற்று அவனியில் அனைத்து சுகங்களையும் அடைந்து அமோகமாக வாழ வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்.

கருத்துகள்

  1. We were fortunate to get to know this Temple from Mr.sathianarayanan, who is my neighbor. We had darshan along with satianarayan and his wife. Thatrubama ambal nam mun katchi allithal. Great vibration. Really great experience.

    பதிலளிநீக்கு
  2. Great.ஆசீர்வதிக்கபட்ட தம்பதிகள்.உங்ஙள் தொண்டு சிறக்க வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. Thanks for sharing the divine Darshan and Leela of the divine mother

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மஹாகாலா ஓங்காரா மஹேஷ்வரா